Answer» வரலாற்றுக்கு முந்தைய காலம்வரலாற்று காலத்திற்கு முந்தைய இந்தியா - எழுத்துகள் அறிமுகமாவதற்கு முந்தைய காலகட்டம் வரலாற்றுக்கு முந்தைய காலம் என அழைக்கப்பட்டது.
- இது கற்காலம் எனவும் அழைக்கப்பட்டது.
- கற்காலத்தினை பொறுத்த வரையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்க தேசம் முதலியன அடங்கிய தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஒரே பகுதியாக கருதப்பட்டது.
- மனித இனத்தின் மூதாதையர் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றியது.
- காலப்போக்கில் அவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர்.
- 10 இலட்சம் முதல் 20 இலட்சம் வரையிலான ஆண்டுகளுக்கு முன்னரே வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மனிதர்கள் இந்தியாவில் இருந்தார்கள் என்பதை அண்மையில் நடத்தப்பட்ட வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.
- எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் என பிரிக்கப்படுகிறது.
|