Answer» இடைக் கற்கால நாகரிகம் நிலவிய இடங்கள்- இந்தியாவில் இடைக் கற்காலப் பண்பாட்டு கடற்கரைப் பகுதி, மலை, மணற்பாங்கான இடம், வடிநீர்ப் பகுதி, வனப்பகுதி, ஏரிப் பகுதி, பாறை மறைவிடம், மலை சார்ந்த பகுதி, கழிமுகப் பகுதி என எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் அனைத்து திணை சார் மண்டலங்களிலும் காணப்படுகின்றன.
- இந்தியாவில் உள்ள இடைக் கற்காலப் பண்பாட்டுடன் தொடர்புடைய இடங்கள் பயிஸ்ரா (பீகார்), லங்னஜ் (குஜராத்), பாகர் II, சோபனி மண்டோ, சாராய் நகர் ராஜ் மகாதகா, தம்தமா (உத்திரப்பிரதேசம்), சனகனகல்லு (ஆந்திரப் பிரதேசம்), கடற்கரைப் பகுதிகள் (மும்பை), தூத்துக்குடியின் கிழக்கில் உள்ள தேரிக் குன்றுகள் (தமிழ்நாடு), விசாகப்பட்டினம் மற்றும் கிப்பன ஹள்ளி (கர்நாடகம்) ஆகும்.
|