1.

கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர்தற்காலிகமாக _________ ல் சேமித்து வைக்கப்படுகிறது.

Answer»

பைகல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் தற்காலிகமாக பித்தப்பையில் சேமித்து வைக்கப்படுகிறது. சிறுகுடலானது இரண்டு முக்கிய செயல்களை செய்கிறது. அவை  செரிமானம் மற்றும் உறிஞ்சுதல் ஆகும். இவை, இரு செரிமான சுரப்பிச் சாறுகளான  (i) பித்த நீரை கல்லீரலிலிருந்தும் மற்றும் II) கணைய நீரை கணையத்திலிருந்தும் டியோடினத்தில் பெறுகிறது. கல்லீரலானது உடலில் காணப்படும் மிகப் பெரிய செரிமானச் சுரப்பி  ஆகும். இது செம்மண் நிறத்தில் காணப்படுகிறது.கல்லீரலில் உள்ள செல்கள் பித்தநீரைச் சுரக்கின்றன. அது தற்காலிகமாக பித்தப்பையில் சேகரிக்கப்படுகிறது. பித்த நீரில்  பித்த உப்புகளும் (சோடியம் கிளைக்கோலேட் மற்றும் சோடியம் டாரோ கிளைக்கோலேட்) மற்றும் பித்த நிறமிகளும் (பைலிரூபின் மற்றும் பைலிவிரிடின்) காணப்படுகின்றன .கொழுப்பை செரிக்க வைக்க உதவுகிறது.



Discussion

No Comment Found