1.

கண்ணோட்டம் குறித்து வள்ளுவர் கூறும் கருத்து ?

Answer»

கண்ணோட்டம் குறித்து வள்ளுவர் கூறும் கருத்துக்களை இங்கு பார்க்கலாம்

  • இரக்கமில்லாத கண்களைப் பற்றி வள்ளுவர் குறிப்பிடும் பொழுது பாடலோடு பொருந்தாத இசையால் எவ்வாறு பயன் ஒன்றும் இல்லையோ அதேபோல இரக்கமில்லாத கண்களால் ஒரு பயனும் இல்லை என்பதாக குறிப்பிடுகிறார்.
  • அதை தொடர்ந்து கூறுகையில் நடுநிலையை பற்றி கூறும் பொழுது நடுநிலையாக கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இவ்வுலகமே உரிமை உடையதாகும் என்பதாக நடுநிலை பேணுவதை பற்றி வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
  • அதேபோன்று கண்ணோட்டம் குறித்து கூறுகையில் நஞ்சை உண்ணும் பண்பாளர் என்பதை பேசும்பொழுது விரும்பத்தகுந்த இரக்க இயல்பை கொண்டவர்கள் பிறரின் நன்மைக்காக தனக்கு நஞ்சை கொடுத்தாலும் உண்ணும் பண்புடையவர்கள் என்பதாக வள்ளுவர் குறிப்பிடுகிறார்.


Discussion

No Comment Found