1.

Newspaper and its benefits essay in Tamil

Answer»

Explanation:

நாளிதழ் என்பது ஒவ்வொரு நாளும் அச்சிட்டு வெளியிடப்படும் செய்தி இதழ் ஆகும். தற்காலத்தில் செய்தியல்லாத பிறவற்றையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு நாளிதழ்கள் வெளியிடப்படுகின்றன ஆயினும், மிகப் பெரும்பாலான நாளிதழ்கள் செய்தி இதழ்களாகவே உள்ளன. எனவே இதை செய்தித்தாள்கள் (News PAPERS) என்றும், நாள்தோறும் வெளியிடப்படுவதால் தினசரிகள் (Dailies) என்றும் அழைப்பதுண்டு.

வரலாறு தொகு

கி.பி.1476 இல் இங்கிலாந்தில் வில்லியம் காக்ஸ்டன் என்பவர் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தார்.கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப முனைந்த மேலை நாட்டினர் இந்தியாவில் அதை கி.பி.1550-இல் அறிமுகம் செய்துவைத்தனர்.அதன்பின்,1622 ஆம் ஆண்டில் முதல் செய்தி இதழாக The Weekly News வெளியிடப்பட்டது.பின்,LONDON GAZETTEER என்ற இதழ் முறையாக 1666 -இல் வெளிவந்தது.

இவ்வாறு உலகம் முழுவதும் இதழியல் வளர்ச்சி அடையத் தொடங்கியது.இந்தியாவில் 1780-இல் BENGAL Gazetteer,1789-இல் Indian Gazetteer போன்ற இதழ்கள் வெளியிடப் பெற்றன.தமிழ்நாட்டில் 1831-இல் முதல் தமிழ் இதழாக 'கிறித்தவ சமயம்'வெளிவந்தது.பிறகு,1853-ஆம் ஆண்டில் தின வர்த்தமானி என்னும் தமிழ் வார இதழ் வெளியானது.கி.பி.1870-க்குப் பின்னர், சென்னை மாகாணத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பல்வேறு நாள்,வார,மாத இதழ்கள் வெளிவர தொடங்கின.

தமிழகத்தில் இதழ்களின் வளர்ச்சி தொகு

தமிழ்நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட இதழ்களும் அவற்றின் நிறுவனர்களும் பின்வருமாறு:

1882-சுதேசமித்திரன்&ஞானபானு-வ.உ.சிதம்பரம் பிள்ளை&சுப்பிரமணிய சிவா

1906-சர்வஜனமித்திரன்-வேதமூர்த்தி முதலியார்

1907-இந்தியா-சுப்பிரமணிய பாரதியார்

1917-திராவிடன்,தேசபக்தன்,நவசக்தி-திரு.வி.கல்யாணசுந்தரனார்

1917-பாலபாரதி-வ.வே.சுப்பிரமணிய ஐயர்

1920-தமிழ்நாடு-வரதராஜுலு

1930-ஆனந்த விகடன்-எஸ்.எஸ்.வாசன்

1933-மணிக்கொடி-பி.எஸ்.ராமையா

1934-தினமணி-

1936-விடுதலை-பெரியார் ஈ.வே.ரா.

1937-ஜனசக்தி-ப.ஜீவானந்தம்

1940-கல்கி-ரா.கிருஷ்ணமூர்த்தி

1942-தினத்தந்தி-சி.பா.ஆதித்தனார்.

1963 - தீக்கதிர்



Discussion

No Comment Found