1.

நின்ற பகுபத உருபிலக்கணம் ​

Answer»

ANSWER:

ஒரு பதத்தைப் பிரித்தால் அது பொருள் தருமானால் அது பகுபதம் என்று கண்டோம் அல்லவா? அவ்வாறு ஒரு பகுபதம் பிரிந்து நிற்கும் நிலையில் அமையும் உறுப்புகள் பகுபத உறுப்புகள் எனப்படுவன. இப்பகுபத உறுப்புகள் ஆறு. அவை,

(1) பகுதி

(2) விகுதி

(3) இடைநிலை

(4) சாரியை

(5) சந்தி

(6) விகாரம்

ஆகியன.

இப்பகுபத உறுப்புகளைப் பின்வரும் நன்னூல் நூற்பா தொகுத்துக் கூறுகின்றது.

பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை,

சந்தி, விகாரம் ஆறினும் ஏற்பவை

முன்னிப் புணர்ப்ப முடியும் எப்பதங்களும்

என்பது நூற்பா(133).

இந்த ஆறு உறுப்புகளையும் அறிவுடையோர் கூட்டிச் சேர்த்தால் எல்லாவிதமான பகுபதங்களும் அமையும் என்பது பொருள்

இனி, இந்த ஆறு உறுப்புகள் ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

பெயர்ப்பகுபதம் : வேலன்

வேல் + அன்.

இதில் வேல் - பகுதி

அன் - விகுதி

வினைப் பகுபதம் : செய்தான்

செய்+த்+ஆன்

இதில் செய் - பகுதி

த் - இடைநிலை

ஆன் - விகுதி.

எனவே ஒருபகுபதம் பகுதி, விகுதி ஆகிய இரு உறுப்புகளைப் பெற்றுவரலாம்: இவ்விரண்டோடு இடைநிலையைப் பெற்றும் வரலாம்.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் பகுபத உறுப்புகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் பொருட்டுத் தரப்பட்டன. இனி ஆறு பகுபத உறுப்புகளையும் பற்றிக் காண்போம்.

☺️☺️



Discussion

No Comment Found

Related InterviewSolutions