InterviewSolution
| 1. |
ஒளிச்சேர்க்கையின் போது வெளியேறும் வாயு என்ன? |
|
Answer» ேர்க்கையின் போது வெளியேறும் வாயு ஆக்ஸிஜன் ஒளிச்சேர்க்கை என்ற நிகழ்வின் மூலம் தாவரங்கள் தனக்குத் தேவையான உணவுப் பொருட்களைத் தாங்களே தயாரித்துக் கொள்கின்றன. அதாவது ஒளிச்சேர்க்கையின் போது ஒளி ஆற்றல் வேதி ஆற்றலாக மாற்றப்படுகிறது. photosynthesis ஒளியின் உதவியால் உணவு தயாரிக்கப்படுதல் என்பது ஒளிச்சேர்க்கையின் பொருளாகும். இந்த ஒளிச்சேர்க்கை நிகழ்வின் போது தாவரங்கள் கார்பன் - டை- ஆக்ஸைடை உட்கொண்டு ஆக்ஸிஜன் வாயுவை வெளியிடுகின்றன. ஆகவே மனிதன் சுவாசிக்கும் வாயுவான ஆக்ஸிஜனைத் தருவது தாவரங்கள் ஆகும். ஆக்ஸிஜன் வாயுவானது ஓசோன் வாயுவாக மாற்றப்பட்டு பூமியைக் காக்க பயன்படுகிறது. ஒளிச்சேர்க்கை நிகழ்வின் முடிவில் குளுக்கோஸ் ஸ்டார்ச்சாக மாற்றப்பட்டு பிறகு சேகரிக்கப்படுகிறது. பச்சையம், நீர், ஒளி, கார்பன்- டை- ஆக்ஸைடு ஆகியவை ஒளிச்சேர்க்கை நிகழ்வின் தாவரத்திற்கு தேவைப்படும் இன்றியமையாத காரணியாகும். |
|