InterviewSolution
| 1. |
பாலினப் பெருக்கத்தின் போது ஏன்கேமிட்டுகள் மியோஸிஸ் மூலம் உருவாகவேண்டும்? |
|
Answer» ஸ் (குன்றல் பகுப்பு) மியாசிஸ் என்றச் சொல் 1905 ஆம் ஆண்டு ஃபார்மர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வகை செல் பகுப்பு இனச்செல்களை அல்லது கேமிட்டுகளை உருவாக்குகிறது. பாலினப் பெருக்கம்பாலினப் பெருக்கம் செய்யும் உயிரினங்களில் இருமய நிலை டிப்ளாய்டு செல்கள் காணப்படுகிறது. கேமீட்டுகள் உருவாக்கம் மைட்டாசிஸ் முறையில் நடைபெற்றால், குரோமோசோம் எண்ணிக்கை இரட்டிப்படையும் .அப்போது அந்த உயிரினம் அசாதாரணமானதாகக் காணப்பட வாய்ப்புள்ளது. குன்றல்பகுப்பு (மியாசிஸ்) முக்கியத்துவம் : குன்றல் பகுப்பின் (மியாசிஸ்) போது குரோமோசோம் எண் சரி பாதியாக குறைக்கப்படுகிறது. (N) கருவுறும் போது, ஆண் மற்றும் பெண் கேமீட்டுகள் இணைந்து டிப்ளாய்டு (2N) (இருமைய) நிலையைப் பெறுகிறது. இவ்வாறு குரோமோசோம் எண்ணிக்கையை நிலையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. |
|