பாப்பத்தே என் தொகையை என்ற இதன் சரியான பொருள் பத்துப்பாட்டு எட்டுத்தொகை என்பதாகும்.
தமிழை புகழும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் பத்துப்பாட்டே எட்டுத்தொகையே என்று இந்நூல்களோடு தமிழை இணைத்து புகழ்வர்.
காரணம் இவ்விரண்டும் பழம்பெரும் நூல்களுள் ஒன்றாகும்.
அதேபோன்று இவ்விரு நூல்களும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்று அழைக்கப்படும்.
பத்துப்பாட்டு என்பதில் பத்து நூல்கள் சேர்ந்திருக்கின்றன பத்து நூல்கள் சேர்ந்த தொகுப்பே பத்துப்பாட்டு என்றும் எட்டுத்தொகை என்று சொல்லக்கூடிய நூலிலும் இவ்வாறு எட்டு நூல்கள் சேர்ந்து இருப்பதன் காரணமாக எட்டுத்தொகை என்றும் அழைக்கப்படுவதுண்டு.
பத்துப்பாட்டு எட்டுத்தொகை இவ்விரண்டிலும் உள்ள பாடல்கள் பல்வேறு காலத்தில் வாழ்ந்த புலவர்கள் பாடப்பட்டது அவர்களது பெயர்கள் காணப்படவில்லை.
எட்டுத்தொகை என்ற இந்த தொகுப்பு கி.பி. 3 அல்லது 4 நூற்றாண்டு காலகட்டத்தில் தொகுக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.