1.

பாரதியார் எழுதிய பாடலில் ஒன்று Starting with the letter ப​

Answer»

பக்தியினாலே-இந்தப்

பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!

சித்தந் தெளியும்,-இங்கு

செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,

வித்தைகள் சேரும்,-நல்ல

வீர ருறவு கிடைக்கும்,மனத்திடைத்

தத்துவ முண்டாம்,நெஞ்சிற்

சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்.

ஆசையைக் கொல்வோம்,-புலை

அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம்,கெட்ட

பாச மறுப்போம்,-இங்குப்

பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை

மோசஞ் செய்யாமல்-உண்மை

முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர்

ஈசனைப் போற்றி-இன்பம்

யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம்

plz MARK my ANSWER as BRAINLIEST



Discussion

No Comment Found