InterviewSolution
| 1. |
தாவர வேர் மற்றும் தண்டு எந்த நேரடித்தூணடலுக்கு உட்படும்? |
|
Answer» ர் நேர் புவி நாட்டம் மற்றும் நேர் நீர் நாட்டத் தூண்டுதலுக்கு உட்படும்.தாவரத்தின் பாகங்களான இலைகள் மற்றும் மலர்கள் , தண்டுகள் ஆகியவை சூரிய ஒளி உள்ள திசையை நோக்கி வளரும். புவியீர்ப்பு விசைக்கு ஏற்றவாறு தாவரத்தின் உறுப்புகள் அசையும் நிகழ்வானது புவி நாட்டம் அல்லது புவி சார்பசைவு எனப்படும். அசைவானது தூண்டலின் திசையை நோக்கி இருந்தால் அது நேர் புவி நாட்டம் எனப்படும். மேலும் நீரின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவரங்கள் அசைவது நீர் நாட்டம் அல்லது நீர் சார்பசைவு எனப்படும். எனவே வேரானது நேர் புவி நாட்டம் மற்றும் நேர் நீர் நாட்டம் ஆகியவற்றின் தூண்டுதலுக்கு உட்படும். தாவர தண்டு எதிர் புவி நாட்டம் மற்றும் நேர் ஒளி நாட்டத் தூண்டுதலுக்கு உட்படும். நீர் நாட்டத்திற்கு தண்டு உட்படுவதில்லை. தண்டானது புவியீர்ப்பு திசைக்கு எதிர் திசையில் வளர்வதால் தண்டு எதிர் புவி நாட்டத்தை கொண்டுள்ளது. மேலும் தண்டு சூரிய ஒளியை நோக்கி வளருவதால் தண்டு நேர் ஒளி நாட்டத்தைப் பெற்றுள்ளது. |
|