InterviewSolution
| 1. |
தொகுதி கணுக்காலிகள் பற்றி விளக்குக. |
|
Answer» கணுக்காலிகள்:கணுக்காலிகள் என்பது மிகவும் பழமையானதாகும், மேலும் அதிக எண்ணிக்கையிலான (9,00,000) சிற்றினங்களைக் கொண்ட மிகப்பெரியத் தொகுதி கணுக்காலிகள் தொகுதி ஆகும் .இணைப்பு கால்கள் கொண்ட உயிரினங்கள் “ஆர்த்ரோபோடு” என அழைக்கப்படுகின்றன. பூச்சிகள், சிலந்திகள், நண்டுகள், இறால்கள், பூரான்கள், மரவட்டைகள் மற்றும் தேள்கள் ஆகிய அனைத்தும் கணுக்காலிகளாகும். இவற்றின் உடல் தெளிவான கண்டங்களால் ஆனது. இது தலை, மார்பு, வயிறு என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உடலின் மேற்புறத்தில் கைட்டின் பாதுகாப்பு உறையாக உள்ளது. அது வளரும் போது அதிலுள்ள புறச்சட்டகத்தின் அளவு மாறுபடுவதில்லை. வளர்ச்சியின் போது குறிப்பிட்ட கால இடைவெளியில் தோலுரித்தல் (MOULTING) எனும் நிகழ்வு நடைபெறும். இதன் மூலம் இவற்றின் மேற்புற உறையாக உள்ள கைட்டின் உதிர்க்கப்படுகிறது. |
|