உலகத் தமிழ் கழகத்தை 1968 ஆம் ஆண்டு திருச்சியில் நிறுவி அதில் தலைவராகவும் இருந்தவர் தேவநேயப் பாவாணர்.
இதன் மிக முக்கியமான ஒரு நோக்கம் தமிழை பிற மொழியின் பிடியிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதேயாகும்.
அதற்காக வேண்டியே இதில் உள்ள உறுப்பினர்கள் தமிழ் பெயரை சூட்டவேண்டும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என்கின்ற கோட்பாடுகள் இதில் குறிப்பிடப்படுகின்றன.
தமிழை பாதுகாப்பதற்காகவே உருவான ஒன்றுதான் உலகத்தமிழ் கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் இன்னொரு முக்கியமான விஷயம் தமிழை பிறமொழி சொற்கள் இல்லாமல் தூய தமிழில் எழுதவும் பேசவும் வேண்டும் என்பதேயாகும்.
அதேபோன்று தமிழை உலகெங்கும் எடுத்துச் சென்று தமிழைப் பரப்பிப் தமிழின் பெருமையை உணர்த்த வேண்டும் என்பதுமாகும்.