1.

உற்றார் ஓடு நின்ற விருந்து குறித்து எழுதுக ?

Answer»

உற்றார் ஓடு நின்ற விருந்து

  • சங்க காலத்திலே வாழ்ந்து வந்த நம் பழம்பெரும் தமிழர்கள்; அது அரசனாக இருந்தாலும் சரி, சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி, வந்த விருந்தினர்களை வரவேற்று உபசரித்து போற்றி வந்தனர்.
  • ஆனால் கால மாற்றத்தின் காரணமாக புதியவர்களை வீட்டிற்கு அழைத்து உணவு உபகாரம் செய்வது என்பது குறைந்துவிட்டது.
  • இன்றைய சூழலில் விருந்தோம்பல் என்றால் தன்னுடைய உறவினர்களை மட்டுமே வரவழைத்து உபகாரம் செய்வது என்று எண்ணிக் கொண்டனர்.
  • ஆனால் இதுவும் கூட குறைவு என்றே சொல்லியாக வேண்டும்.
  • காரணம் அவரிடம் குறைந்துவிட்ட மனித நேயம் மட்டுமே.
  • அதுபோல விருந்து பரப்பது குறைந்ததன் காரணமாக நாயக்கர், மராத்தியர் ஆட்சி காலத்தின் பொழுது அதிக அளவிலான சத்திரங்களும் அவர்களுக்காக, வழிப்போக்கர்களுக்காக கட்டப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Discussion

No Comment Found