Answer» வரலாற்றுக்கு முந்தைய இந்தியா- வரலாற்றுக்கு முந்தைய காலம் என எழுத்துகள் தோன்றியதற்கு முந்தைய காலகட்டம் அழைக்கப்பட்டது.
- கற்காலத்தினை பொறுத்த வரையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்க தேசம் முதலியன அடங்கிய தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஒரே பகுதியாக கருதப்பட்டது.
- இந்தியாவில் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மனிதர்கள் 10 இலட்சம் முதல் 20 இலட்சம் வரையிலான ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தார்கள் என்பதை அண்மையில் நடத்தப்பட்ட வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.
- எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் என பிரிக்கப்படுகிறது.
- மக்கள் பயன்படுத்திய பொருட்கள், வாழ்ந்த நிலப்பகுதி, நாகரிகம் நிலவியதாக கண்டறியப்பட்ட முதல் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பண்பாட்டிற்கு பெயர்கள் சூட்டப்பட்டன.
|