1.

Write a essay of passing of water in Tamil

Answer»

ANSWER:

தாகம் போக்க, உணவு சமைக்க,

உடலையும் உடமையையும் தூய்மையாக்க

தண்ணீர் நம் உயிரை போல அவசியம்

ஆனால்

நாம் இந்த தண்ணீரை எத்தனை தேவையற்ற முறைகளில் செலவு செய்து வீணாக்கி கொண்டிருக்கிறோம்

நம் வீடு கட்ட தண்ணீர் தேவை

உடை செய்ய தண்ணீர் தேவை

The importance of WATER

நம் துணிமணி, மூக்கு கண்ணாடி, மருந்து,

ஆஸ்பத்திரியின் அனைத்து உபகரணங்கள்

நாம் உட்காரும் நாற்காலி, மேசை, பேனா, பென்சில்,

பாத்திரம், பேப்பர், சோபா, ஸ்கூட்டர், பைக், கார்

விமானம், கப்பல், துப்பாக்கி

அதனுள் இருக்கும் உதிரி பாகங்கள்,

என்று

நாம் காது குடையும் குச்சி வரை

பூமியில் இருக்கும் நாம் உபயோகிக்கும்

சகலமான

அனைத்து சாமான்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும்

தண்ணீர் இல்லாமல் இயங்காது।

ஒரு ஜீன்ஸ் பாண்ட் தயாரிக்க 20000 லிட்டர் தண்ணீர்,

ஒரு குளிர்பானம் தயாரிக்க 2500 லிட்டர் தண்ணீர்

என்று அனைத்து பொருட்கள் தயாரிக்க

தேவைப்படும் தண்ணீர் செலவு பட்டியலை

உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியில் வெளியிடப்பட்டுள்ளது।

ஆகவே ஐரோப்பிய நாடுகளும்

எல்லா பொருட்களின் மறுசுழற்சி முறையை

(recycling )

தீவிரப்படுத்தியுள்ளது।

மேசை, நாற்காலி, கார்கள், ஜீன்ஸ் உடைகள்,

மரச்சாமான்கள் என்று ஒருமுறை உபயோகப்படுத்தி

வேண்டாம் என்று மக்கள் குப்பையில் எறிந்த பொருட்களை

சேகரித்து அதனை தூய்மைப்படுத்தி,

தேவையான சீர்மை செய்து அழகுபடுத்தி,

The importance of Water

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. இசை முரசும், முண்டாசு எழுத்தும் மறைந்த நாள்!

புதிய பொருட்கள் போல் மாற்றி

மீண்டும் விற்பனை செய்ய தொடங்கிவிட்டன।

வளர்ந்த நாடுகளிடம் இல்லாத செல்வமா, பணப்புழக்கமா?

அவர்கள் ஏன் புதுப்பிக்க பட்ட பழைய பொருட்களை

வாங்கி உபயோகிக்க வேண்டும்?

எல்லாம் தண்ணீர் என்னும் விலைமதிப்பில்லாத

உயிர் காக்கும் உயிர்நீரின் அவசியத்தை உணர்ந்துதான்!!!

எல்லா பொருட்களும் மீண்டும் மீண்டும் புதிதாக உற்பத்தி செய்ய ஆகும்

தண்ணீர் செலவினத்தை குறைத்து,

மனிதன் , பறவை, விலங்கு என பூமியில் வாழும்

அனைத்து உயிர்களுக்கும் உரிமை உள்ள தண்ணீரை

மனிதன் மட்டும், ஐந்தறிவு கொண்ட ஒரே காரணத்தால்,

மற்ற உயிர்களிடமிருந்து ஒரேயடியாய் அபகரித்து

தேவையற்ற பொருட்களின் உற்பத்தி செலவுக்காகும்

தண்ணீரை மிச்சப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான்।

ஆகவே, உபயோகமற்ற, தேவையற்ற பொருட்களை

நாம் வீட்டிலும் வாங்கி குவிக்காமல்,

ஒருமுறை உபயோகப்படுத்தி

கலர் பிடிக்கவில்லை, மாடல் பிடிக்கவில்லை

என்று

நீண்ட நாள் உபயோகிக்காத

எந்த ஒரு பொருளையும்

குப்பையில் எறிந்து விடாமல்,

அல்லது

வீட்டுக்குள்ளேயே பூதம் காத்த புதையல் போல

உபயோகிக்காமல்

வருடக்கணக்கில் போட்டு வைக்காமல்,

தேவைப்படும் வேறு யாருக்கேனும்

சிறிய பணம் பெற்று கொண்டோ

அல்லது இலவசமாகவோ கொடுத்து

அந்த பொருள் உற்பத்தி செய்ய உதவிய

தண்ணீருக்கு மதிப்பு அளிப்போம்।

-சுஜாதா பூபதிராஜ்

மேலும் WATER செய்திகள் arrow_forward

வாட்டர் மேட்டர்ஸ்.. தண்ணீர் சேமிப்புக்கு ஐடியா சொல்ல வாங்க.. சென்னையில் தொடங்கிய அசத்தல் கண்காட்சி

ஒரு சொட்டு தண்ணீர் குடிக்கலை.. ஒரு வருஷமா.. உடம்பெல்லாம் பிரஷ்ஷா இருக்காம்.. கிட்னிக்கு நல்லதாம்!

அவினாசி சாலையில் சோப்பு போட்டு குளித்து போராட்டம்.. ஆட்சியர் அதிரடியாக செய்த காரியம் இதுதான்!

சிஏஏவை ஆதரித்த கேரள இந்துக்களுக்கு தண்ணீர் மறுக்கப்பட்டதாக டுவிட்.. ஷோபா எம்பி மீது வழக்கு

Read More About:தண்ணீர்

Published On April 8, 2019

English Summary

Our reader SUJATHA Boopathiraj has EXPRESSED her views on the Importance of Water.



Discussion

No Comment Found